அந்தரத்தில் ஆபத்தாக புஷ்-அப் செய்யும் இளைஞர்! பார்த்தாலே பக்-பக்..வைரல் வீடியோ..

ஒரு இளைஞர், அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு புஷ்-ஆப் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 29, 2024, 06:54 PM IST
  • அந்தரத்தில் புஷ்-அப் செய்யும் இளைஞர்
  • ஆபத்தான முறையில் உடற்பயிற்சி..
  • வைரல் வீடியோ
அந்தரத்தில் ஆபத்தாக புஷ்-அப் செய்யும் இளைஞர்! பார்த்தாலே பக்-பக்..வைரல் வீடியோ.. title=

இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக, பலர் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து ட்ரெண்டாகின்றனர். மலை சரிவில் நின்று செல்ஃபி எடுப்பது, வெள்ளம் ஏற்படும் போது ரீல்ஸ் செய்வது, ஆபத்தான மழையில் நடனமாடி வீடியோ எடுப்பது, சினிமா செலிப்ரிட்டிகள் செல்ஃபி கொடுக்க மறுத்தும் வீம்புக்கென்றே அருகில் சென்று போட்டோ எடுப்பது என இப்படிப்பட்ட செயல்கள் நீண்டு கொண்டே பாேகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த செல்ஃபி மட்டும் ரீல்ஸ் மோகம், நாளுக்கு நாள் அதிகமாகிறதே அன்றி குறைவதில்லை. ஒரு சிலர் ரயில் வரும்போதெல்லாம் அதற்கு முன்பு நின்று ரீல்ஸ் செய்கின்றனர். இதை ஆபத்து என்று உணர்ந்து செய்கின்றனரா அல்லது உணராமல் செய்கின்றனரா என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வகையில்தான், சமீபத்தில் ஒரு இளைஞர் புல்-அப் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ..

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஊருக்கு வழி காட்டும் சைன் பாேர்டில் தொங்கிக்கொண்டு புல்-அப் உடற்பயிற்சியை செய்கிறார். நெடுஞ்சாலைகளில் மிகவும் அதிகமான உயரத்தில்தான் இது போன்ற சைன் போர்டுகள் இருக்கும். அவ்வளவு உயரத்தில் ஏறி, இப்படி புல்-அப் செய்யவில்லை என்று அந்த இளைஞரை யார் கேட்டது?

உத்திரப்பிரதேச நெடுஞ்சாலையில், அமேதிக்கு செல்லும் வழியில் அந்த இளைஞர் இவ்வாறு புல் அப் செய்திருக்கிறார். இதி அந்த இளைஞர் மடுமல்ல, அவருடன் இன்னொருவரும் இருக்கிறார். அவர், அந்த சைன் பலகைக்கு அந்த பக்கம் அமர்ந்திருப்பதால் அவரது முகம் மறைந்து விட்டது. 

மேலும் படிக்க | கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ..

நெட்டிசன்கள் கருத்து..

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் சிலர் கடுப்பாகவும், சிரிப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “காலையில் ஜிம்மிற்கு போக மறந்திருப்பார், அதனால் இங்கு வந்து தொங்கி காண்டிருக்கிறார்” என்று கூற, இன்னொருவர், இது போன்று ஒருவர் செய்வது பலருக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News