தோளில் பாம்பு, உதட்டில் சிரிப்பு: பாம்புடன் படு கூலாக போஸ் கொடுத்த யஷிகா, வீடியோ வைரல்

Viral Video of Yashika Aannand: பாம்புடன் படு கூலாக யஷிகா போஸ் கொடுக்கும் வீடியோவுக்கு, அவரது ரசிகர்களும், இணையவாசிகளும் பலவித கமெண்டுளை அள்ளி வீசி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 9, 2022, 10:23 PM IST
  • சமூக ஊடகங்களில் வினோதமான வீடியோக்கள் விரைவில் வைரல் ஆகி விடுகின்றன.
  • சமீபத்தில் யஷிகா தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
  • வீடியோவில், அவர் தனது கழுத்தில் ஒரு போவா பாம்புடன் மிகவும் காஷுவலாக போஸ் கொடுப்பதைக் காண முடிகின்றது.
தோளில் பாம்பு, உதட்டில் சிரிப்பு: பாம்புடன் படு கூலாக போஸ் கொடுத்த யஷிகா, வீடியோ வைரல்  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் வினோதமான வீடியோக்கள் விரைவில் வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பிரபலங்களின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு வீடியோவைப் பற்றிதான் இந்த பதிவில் காணவுள்ளோம். 

சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு பிரபலத்தின் காரணமாக மீண்டும் ஒரு பாம்பின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

 

யாஷிகா ஆனந்த் பிரபலமான தமிழ் சினிமா நடிகை ஆவார். மாடல், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலமான இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் பங்கேற்ற பிறகு அதிகப்படியான ரசிகர்களைப் பெற்றார். 

சமீபத்தில் யஷிகா தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வீடியோவில், அவர் தனது கழுத்தில் ஒரு போவா பாம்புடன் மிகவும் காஷுவலாக போஸ் கொடுப்பதைக் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | 'ஓ சொல்றியா மாமா...' மாஸாக டான்ஸ் ஆடி கேட்ட மணமகள், ஷாக் ஆன மணமகன்: வீடியோ வைரல்

பாம்புடன் படு கூலாக யஷிகா போஸ் கொடுக்கும் வீடியோவுக்கு, அவரது ரசிகர்களும், இணையவாசிகளும்  பலவித கமெண்டுளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. 

யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் பங்கேற்ற பிறகு இவருக்கான ரசிகர்கள் மிக அதிகமாக அதிகரித்தனர். 

சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் காயமடைந்தார். ஜூலை 2021 இல், அவர் சென்னையில் கார் விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்தார். விபத்திலிருந்து மன உறுதியுடன் யஷிகா மீண்டு வந்தார். இன்ஸ்டாகிராம் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய யாஷிகா, தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி வருகிறார்.

மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை - பதைபதைக்க வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News