700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்!

700 ஆண்டுகளுக்குப் பிறகு 5 சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் கேதார, ஹன்ஸ, மாளவ்ய, சதுஷ்சக்ரம் மற்றும் மஹாபாக்யம் ஆகிய 5 யோகங்கள் ஆகும். இந்த யோகங்கள் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2023, 09:36 PM IST
  • வாழ்க்கையில், வசதிகளையும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
  • வேலை-வியாபாரம் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
  • பணமும், கௌரவமும், மரியாதையும் கிடைக்கும்.
700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! title=

ஜோதிடத்தின் படி, அவ்வப்போது கிரகங்களின் பெயர்ச்சி பல சிறந்த யோகங்களை உருவாக்குகிறது. அதன் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணலாம். இப்படிப்பட்ட நிலையில் 700 ஆண்டுகளுக்குப் பிறகு 5 சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் கேதார, ஹன்ஸ, மாளவ்ய, சதுஷ்சக்ரம் மற்றும் மஹாபாக்யம் ஆகிய 5 யோகங்கள் ஆகும். இந்த யோகங்கள் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த 4 ராசிக்காரர்கள் இந்த சுப ராஜயோகங்களால் பலன் அடையப் போகிறார்கள். இதனால் பணமும், கௌரவமும், மரியாதையும் கிடைக்கும்.

கடக ராசி

ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜ யோகம் இருப்பது மங்களகரமானதாக இருக்கும். சுக்கிரனும், குருவும் உங்கள் ராசியிலிருந்து அதிர்ஷ்ட ஸ்தானத்தைப் பார்க்கப் போகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் அதிகரிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. உத்தியோகத்தில் விரும்பிய வேலை வாய்ப்பு வரலாம். இந்த நேரமும் மாணவர்களுக்கு அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில், வாழ்க்கையில், வசதிகளையும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வேலை-வியாபாரம் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | வார ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

கன்னி ராசி

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு இந்த 5 ராஜயோகங்களும் சாதகமாக இருக்கும். ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகப் போகிறது, இதுபோன்ற சூழ்நிலையில் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும், வாழ்க்கை துணையின் முன்னேற்றம் பண வரவைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் வணிக ஒப்பந்தமும் செய்யப்படலாம். நீங்கள் ஒருவருடன் இணைந்து வேலை அல்லது திட்டம் ஏதேனும் தொடங்க செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. திருமணமானவர்களின் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் பொருளாதார நிலையில் பலம் இருக்கும்.

மீன ராசி

ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமாகவும் பலனளிப்பதாகவும் இருக்கவும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன தைரியமும் உறுதியும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் வேலை-வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் பணிபுரியும் நபர்களை பணியிடத்தில் பாராட்டலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  ​​நீங்கள் ஏழரை நாட்டு சனியின் கட்டத்தை கடந்து செல்கிறீர்கள், எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: ‘இவற்றை’ செய்தால் வாழ்க்கையில் என்றென்றும் சுக்கிர திசை தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News