மகா சிவராத்திரி 2024: சனி-சுக்கிரன் சேர்க்கையில் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ பலன்..!

Maha Shivratri 2024: மகா சிவராத்திரிக்கு முன்பாக நடைபெறும் சனி சுக்ரன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கப்போகிறது. திருமண நடை நீங்கும், ஆரோக்கியம் மேம்படும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 06:00 AM IST
  • மகா சிவராத்திரி ராசி பலன்கள் 2024
  • 3 ராசிகளுக்கு கிடைக்கும் அபூர்வ பலன்கள்
  • வருமானம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம்
மகா சிவராத்திரி 2024: சனி-சுக்கிரன் சேர்க்கையில் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ பலன்..! title=

மகா சிவராத்திரி மார்ச் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்த மகா சிவராத்திரி 3 ராசிகளுக்கு ஆபூர்வ பலன்களை கொடுக்க இருக்கிறது. சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெறுவதாக நம்பப்படும் இந் நல்லநாள் இதுவரை நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு புது வழியை காட்ட இருக்கிறது. அதனால், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை பக்தர்கள் தரிசிக்க இருக்கின்றனர். இப்போது வர இருக்கும் மகா  சிவராத்திரிக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது மார்ச் 7 ஆம் தேதியன்று சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையும் நடைபெற இருக்கிறது.  

சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்கிறார். மார்ச் 31 வரை சுக்கிரன் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி பெயர்ச்சி பலரது வாழ்க்கையை பிரகாசமாக்கும் நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, மஹாசிவராத்திரி அன்று சனி-சுக்கிரன் கூட்டணி 3 ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் நன்மை பயக்கும். அந்த அதிர்ஷ்டகார ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Isha Mahashivratri : ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு! எங்கு எப்படி பார்ப்பது?

ரிஷபம் - 

சுக்கிரனின் சஞ்சாரத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் பெருகும். எங்காவது பணம் சிக்கியிருந்தால் அந்த சிக்கலுக்கு வழி பிறக்கும். குடும்பத்தில் நல்ல செய்தி வரலாம். ஆரோக்கியம் மேம்படும், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடும்  வாய்ப்பு உள்ளது.

மிதுனம் - 

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உருவாகும். அதாவது முதலீடு, தொழில் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதற்காகன  சரியான நேரமும் கூட. முதலீடுகள் லாபகரமாக இருக்கும். செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் வங்கி இருப்பு தொடர்ந்து அதிகரிக்கலாம். நோய்கள் விலகும். பணியில் உங்களுக்கு இருக்கும் சதிகாரர்களின் தந்திரங்களை முறியடிப்பீர்கள். தொழிலில் அதிக முன்னேற்றம் அடையலாம். தைரியத்துடனும் பலத்துடனும் வெற்றியை அடைவீர்கள்.

துலாம் -

உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பலன்கள் மேலும் அதிகரிக்கலாம். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். அதிக கவனம் செலுத்துவதால் குழந்தைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.

நல்ல காலமும் நேரமும் கூடி வருவதால், இந்த சரியான சந்தர்ப்பத்தை மூன்று ராசிக்காரர்களும் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவீர்கள். இனி வாழ்க்கையும் பிரகாசமாகும்.

மேலும் படிக்க | மஹா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள்..! வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News