இந்த 3 ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் ஆரம்பம்: புதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம்

Mercury Transit: சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை மகாலட்சுமி யோகத்தை உண்டாக்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2022, 03:24 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மகாலக்ஷ்மி யோகத்தின் உருவாக்கம் வரப்பிரசாதமாக அமையும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் சுப பலன்களைத் தரும்.
  • பணியிடத்தில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
இந்த 3 ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் ஆரம்பம்: புதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம் title=

ரிஷப ராசியில் மகா லக்ஷ்மி யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி ஜூன் 18ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழையவுள்ளார். புதன் கிரகம் ஏற்கனவே ரிஷப ராசியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜூன் 18 முதல் புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ரிஷப ராசியில் இணையும். 

செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மற்றும் புத்திசாலித்தனம், செல்வம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை மகாலட்சுமி யோகத்தை உண்டாக்குகிறது. 

ஜோதிடத்தில் மகாலக்ஷ்மி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இது மிக சிறப்பாக இருக்கும். இந்த மஹாலக்ஷ்மி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மஹாலக்ஷ்மி யோகம் வலுவான பண ஆதாயத்தை தரும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு மகாலக்ஷ்மி யோகத்தின் உருவாக்கம் வரப்பிரசாதமாக அமையும். திடீர் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அபாயகரமான முதலீடுகளும் உங்களுக்கு பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் அதிகமாகும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். மொத்தத்தில், இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும் 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் சுப பலன்களைத் தரும். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரிகள் லாபம் அடைவார்கள். 

இந்த காலத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் அல்லது ஒரு பெரிய ஆர்டரை நீங்கள் பெறலாம். அன்னை லக்ஷ்மியின் அருளால், இந்த நேரம் பண வரவு அதிகமாக இருக்கும். செல்வச்செழிப்பு அதிகரிக்கும். இது உங்கள் எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும்.

சிம்மம்: 

புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் மகாலக்ஷ்மி யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலனைத் தரும். பணியிடத்தில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். பல நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பண ஆதாயத்தின் இந்த சூழ்நிலை உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த நேரம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Lakshmi Narayana Yogam: லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News