கேட்ச் பிடிக்க மாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடிய சிஎஸ்கே - பீல்டிங்கில் படுமோசம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர்கள் 5 கேட்சுகளை கோட்டைவிட்டனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2022, 10:06 PM IST
  • சென்னை அணியின் மோசமான பீல்டிங்
  • 5 கேட்சுகளை கோட்டை விட்டனர்
  • பொல்லார்டுக்கு அட்டகாசமான பீல்ட் செட்டப்
கேட்ச் பிடிக்க மாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடிய சிஎஸ்கே - பீல்டிங்கில் படுமோசம் title=

மும்பை டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சவுத்திரி வீசிய அந்த ஓவரில் ரோகித் சர்மா கேட்ச் என்ற முறையில் டக் அவுட்டானார். அதே ஓவரில் யார்கர் பந்தில் இஷான் கிஷன் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகல் - இலங்கை இளம் வீரர் சேர்ப்பு

இஷான் கிஷனுக்கு விசப்பட்ட யார்க்கர் பந்தில் ஸ்டம்ப் தெறித்தது. அதன்பின் வந்த மும்பை வீரர்களும் பொறுப்புடன் விளையாடாமல் வானத்தை நோக்கியே அடித்தனர். இதனால், பலமுறை பந்து பவுண்டரிக்கு செல்லாமல் கேட்சுக்கு சென்றது. இங்கு தான் சென்னை அணியின் சாமார்த்தியத்தை பார்க்க முடிந்தது. நீங்கள் எத்தனை கேட்ச் கொடுத்தாலும் நாங்கள் பிடிக்கவே மாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு கேட்சுகளை விட்டனர். இதனை தொடங்கி வைத்த பெருமை கேப்டன் ஜடேஜாவை சேரும்.

எளிதாக கைக்கு தூக்கியடிக்கப்பட்ட கேட்சை அவர் கோட்டை விட, அடுத்ததாக இந்த முறை பிராவோ கேட்சை விட்டார். ஸ்லிப்பில் நின்ற அவரை தேடி பந்து சென்றது. ஆனால், கேப்டனே கேட்ச் விடுகிறார், நான் பிடித்தால் என்னாவது என கைக்கு வந்த கேட்சை விட்டார். அடுத்ததாக மீண்டும் கேப்டன் ஜடேஜா. இந்தமுறையும் கைக்கு வந்த கேட்சை நழுவ விட்டார். மும்பை அணி வீரர்கள், இப்படியாவது ரன் கிடைக்கட்டும் என ஓடியோடி ரன் எடுத்தனர். கேட்ச் விட்ட கேப்பில் இரண்டு மூன்று ரன்களாக சேர்த்தனர். ஒரு வழியாக பொல்லார்டு கேட்சை சரியாக பிடித்த சென்னை வீரர்கள் உடனடியாக பழைய ஃபார்முக்கு திரும்பினர். இந்த முறை உனத்கட் கைக்கு கொடுத்த கேட்சை ஷிவம் தூபே நழுவவிட்டார். மொத்தம் 5 கேட்சுகளை பிடிக்கத் தவறியது சென்னை அணி. தோனியும் தன் பங்குக்கு ஒரு ஸ்டம்பிங்கை மிஸ் செய்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி வீரர்களின் புண்ணியத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக கேட்சுகளை விட்ட அணியாக ஆர்சிபி உள்ளது. மொத்தம் 10 கேட்சுகளை விட்டுள்ளனர். இப்போட்டியில் 5 கேட்சுகளை விட்டதன் மூலம் அவர்களை சென்னை அணி சமன் செய்துள்ளது.  பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், பொல்லார்டுக்கு, தோனி பீல்டிங் செட் செய்து விக்கெட் எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

 

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் குட்டி சச்சின்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News