இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: ICC அறிவிப்பு

டி-20 உலகக் கோப்பையின் திருவிழா இந்தியாவில் நடைபெறும். அதாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா நடத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 01:02 PM IST
இந்தியாவில்  நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: ICC அறிவிப்பு title=

Sports News: 2021 டி-20 உலகக் கோப்பையின் திருவிழா இந்தியாவில் நடைபெறும். அதாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா நடத்த உள்ளது. கொரோனா நோயின் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த, இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் (T20 World Cup) தொடர் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. 

அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் நடைபெறவிருந்த பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை (Women's 50-over World Cup) 2022 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி உறுதிப்படுத்தியது.

ALSO READ |  பயங்கர கோபத்தில் சோயிப் அக்தர், 'T20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பு; BCCI இன் கை'

"கோவிட் -19 (COVID-19) காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2020 (ICC Men's T20 World Cup 2020) ஆஸ்திரேலியாவில் 2022 இல் நடைபெறும். ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 திட்டமிட்டபடி இந்தியா நடத்தும்" என்று ஐ.சி.சி (ICC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

"நியூசிலாந்தில் நடந்த ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2021 (ICC Women's Cricket World Cup 2021) பிப்ரவரி-மார்ச் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் உலகளவில் கொரோனா அச்சத்தின் காரணமாக அனைத்து போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  கொரோனா காரணமாக ICC டி-20 உலக கோப்பை ஒத்திவைப்பு.. IPL 2020 தொடர் உறுதி

இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை (T20 World Cup Postponed) ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு இடையே 16 அணிகள் கொண்ட போட்டியை நடத்துவது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

Trending News