IND vs ENG: காயம் காரணமாக 3 பேர் விலகல். அவர்களுக்கு பதிலாக 2 பேர் தேர்வு

காயம் காரணமாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து (England) செல்வார்கள் என்று இந்திய அணி தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 06:00 PM IST
  • வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணிக்கு பின்னடைவு.
  • இரண்டு பேட்ஸ்மேன்களை இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவு.
  • ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
IND vs ENG: காயம் காரணமாக 3 பேர் விலகல். அவர்களுக்கு பதிலாக 2 பேர் தேர்வு title=

புதுடெல்லி: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணியில் (Indian team) இருந்து 3 வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். இதனையடுத்து இரண்டு பேட்ஸ்மேன்களை இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பிருத்வி ஷா மற்றும் சூர்யகுமார் இங்கிலாந்து செல்வார்கள்
காயம் காரணமாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து (England) செல்வார்கள் என்று இந்திய அணி தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவற்றில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மோசமாக விளையாடிய  பிருத்வி ஷா கடந்த ஆண்டு முதல் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 

பிருத்வி ஷா (Prithvi Shaw) மற்றும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணியில் இணை உள்ளனர். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான அணி நிர்வாகத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

கில், சுந்தர், அவேஷ் ஆகியோர் காயமடைந்தனர்
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சுப்மான் கில் (Shubman Gill), வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) மற்றும் அவேஷ் கான் (Avesh Khan) ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டதால், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறவுள்ளனர்.

ALSO READ | இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

பிருத்வியும் சூர்யகுமாரும் இலங்கையில் உள்ளனர்
ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணியில் பிருத்வியும் சூர்யகுமாரும்  இடம் பெற்றுள்ளனர். இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெறவுள்ளது. 

பிருத்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் தற்போது இலங்கையில் உள்ளனர். மேலும் அவர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த இரு வீரர்களும் இந்த மாத இறுதியில் இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான அணியின் ஒரு பகுதியாக இணையவுள்ளனர். 

ALSO READ | IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்ட்யா என புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News