கேப்டனாக மிக வேக 1,000 ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் கோலி...

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Last Updated : Jan 8, 2020, 12:36 PM IST
கேப்டனாக மிக வேக 1,000 ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் கோலி... title=

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைப்பெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 செவ்வாய்கிழமை நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் கோலி இறுதிவரை நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் குவித்தார்.

இப்போட்டியில் அவர் தனது 22-வது ரன்னை எட்டிய போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

MS தோனிக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினையும் அவர் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். 

தோனி 62 டி20 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கிய 1112 ரன்கள் எடுத்திருந்தார். பாஃப் டு பிளெசிஸ் (40 ஆட்டங்களில் 1273 ரன்கள்), கேன் வில்லியம்சன் (39 ஆட்டங்களில் 1083 ரன்கள்), ஈயோன் மோர்கன் (43 ஆட்டங்களில் 1013 ரன்கள்), அயர்லாந்தின் வில்லியம் போர்ட்டர்பீல்ட் (56 ஆட்டங்களில் 1002 ரன்கள்) ஆகியோர் பட்டியலில் உள்ள மற்ற கேப்டன்கள் ஆவர்.

ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியாவின் உறுதியான வெற்றியின் போது, ​​டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக கோலி, இந்திய அணியின் துணை தலைவர் ரோஹித் ஷர்மாவின் சாதனையினையும் முறியடித்தார்.

தற்போது 71 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கோலி 2663 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையினை பெற்றார். இவரைத் தொடர்ந்து இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரோஹித் ஷர்மா 96 இன்னிங்ஸ் விளையாடி 2633 ரன்கள் குவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 80 இன்னிங்ஸ்களில் 2436 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை பொறுத்தவரையில்., டாஸ் வென்ற பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசத் தெரிவுசெய்தார். இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர், லங்கா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 142 ரன்களில் முடித்தது இலங்கை.

அணியில் அதிகப்பட்சமாக குசல் பெரேரா 34 ரன்கள் எடுத்த்தார். தனஞ்சய டி சில்வா மற்றும் வாணிந்து ஹசரங்கா சில ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு 143 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சைனி தனது நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஷார்துல் தாக்கூர் 3-23 என்ற புள்ளிகளுடன் முடித்தார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ஆட்டத்தின் 17.3-வது பந்தில் தனது வெற்றி இலக்கினை எட்டியது. அணியில் அதிகப்பட்சமாக லோகேஷ் ராகுல் 45(32) ரன்கள் குவித்தார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது...

Trending News