தமிழகத்தில் புதிய 4 மாவட்டங்கள் உதயம்; TN Govt அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு!!

Last Updated : Nov 13, 2019, 12:18 PM IST
தமிழகத்தில் புதிய 4 மாவட்டங்கள் உதயம்; TN Govt அரசாணை வெளியீடு!  title=

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு!!

சென்னை: சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 32 மாவட்டங்கள் இருந்தன. பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால், அவற்றை பிரிக்க வேண்டும் என, அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12ஆம் தேதியிட்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகவும், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டை தலைமையிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு வருவாய் கோட்டங்களும், 5 தாலுக்காக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்களும், வண்டலூர் உட்பட 8 தாலுக்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டும், தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமையிடமாக கொண்டும் செயல்படும். திருநெல்வேலி மாவட்டம், 2 வருவாய் கோட்டங்கள், 8 தாலுக்காக்கள் கொண்டதாகவும், தென்காசி மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 8 தாலுக்காக்கள் கொண்டதாகவும் இருக்கும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர், மூன்றாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் 6 தாலுக்காக்களை கொண்டதாகவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை, தலா 4 தாலுக்காக்களை கொண்ட மாவட்டங்களாக விளங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களின், அதனதன் நகரங்களே, தலைமையிடமாக விளங்கும் என்றும், தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

Trending News