தொழிற்படிப்புகளில் 75 சதவீதம் உள்ஒதுக்கீடு– மசோதா தாக்கல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழக்கும் சட்ட மசோதாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 11:22 AM IST
தொழிற்படிப்புகளில் 75 சதவீதம் உள்ஒதுக்கீடு– மசோதா தாக்கல்! title=

சென்ற ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக அரசுப்பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தீர்வுகளை பரிந்துரைகளை செய்திடவும், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசு பள்ளிகளில் (Government School) பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத் (TN Assembly) தொடரிலேயே அறிமுகம் செய்வது என்று கடந்த 4 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ALSO READ | பிடிஆர் vs வானதி ஸ்ரீனிவாசன்: சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியமான கேள்வி பதில்கள்

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை சட்ட மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆதரவை சட்டப்பேரவையில் இன்று முறையாக தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அவர்களின் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள் பாதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சோதா மீதான விவாதத்தில் ஒரு மனதுடன் ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் ஆதரவும் உள்ளதால் இன்றே இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | 'கன்னிப்பேச்சை' 'அறிமுகப்பேச்சாக' மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News