மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரம்பியது!

இரண்டு நாட்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது!

Last Updated : Apr 3, 2019, 08:44 PM IST
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரம்பியது! title=

இரண்டு நாட்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது!

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்தமுள்ள 1,761 இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும். மீதமுள்ள 912 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் நாள் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆனது வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் தற்போது இந்த கலந்தாய்வில் 736 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலந்தாய்வின் முதல் நாளில், 314 இடங்கள் நிரம்பின. இதனையடுத்து நேற்று நடந்த கலந்தாய்வில் 779 பேர் பங்கேற்றுள்ளர், அவர்களில் 422 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். ஆக இரண்டு நாட்களில், மொத்தம், 736 இடங்கள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கியுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணைப்படி கலந்தாய்வு நடைப்பெற்றால், அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

எனினும் இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் தடை விதிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News