மர்ம கும்பல் தாக்கி அதிமுக பிரமுகர் பரிதாப பலி!

நாகை மாவட்டம் சிர்காழியில் மர்ம கும்பள் பலமாக தாக்கியதில் அதிமுக பிரமுகர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்!

Last Updated : Jul 23, 2018, 08:21 PM IST
மர்ம கும்பல் தாக்கி அதிமுக பிரமுகர் பரிதாப பலி! title=

நாகை மாவட்டம் சிர்காழியில் மர்ம கும்பள் பலமாக தாக்கியதில் அதிமுக பிரமுகர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்!

சீர்காழி அடுத்த தென்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு(48). இன்று காலை இவர் சீர்காழியில் இருக்கும் தனது நண்பர் வீட்டுக்கு சென்று காரில் திரும்பிய இவரின் காரின் மீது மர்ம நகர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். 

அதிர்சியடைந்த ரமேஷ் பாபு காரை விட்டு விட்டு வெளியே இறங்கியுள்ளார். அப்போது அவரை சூழ்ந்த மர்ம கும்பள் அவரை சரமாரியாக அடித்துத் தாக்கினர். இந்த சம்பவத்தில் ரமேஷ் பாபு சம்பவயிடத்திலேயே பலியானார்.

கொள்ளிடம் பகுதியில் அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்த இவர், அரசியல் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்!

Trending News