செங்கல்பட்டு : சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன்..?

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சொத்து தகராறில் மகனே தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 22, 2022, 12:29 PM IST
    சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்
    தலைமறைவாக உள்ளவருக்கு போலீசார் வலைவீச்சு
    பட்டப்பகலில் நடந்தேறிய படுபயங்கரம்
செங்கல்பட்டு : சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன்..? title=

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி. 65 வயதான இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒருவருடத்திற்கு முன்பு உடல் நிலை காரணமாக உமாபதியின் மனைவி இறந்துபோனார்.

இதற்கிடையே, பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடித்து பேர பிள்ளைகளை பார்த்தார், உமாபதி. அப்போது மகளின் கணவர் திடீரென்று இறந்துவிட இரண்டாவதாக ஒருவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். அப்போது உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை லோகேஸ்வரியின் மகனான தன்னுடைய பேரன் பெயரில் எழுதி வைத்தார். அங்கு தான் பிரச்சினை வெடித்தது. அக்காவின் மகனுக்கு வீடு எழுதிக் கொடுத்ததைக் கேட்டு சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனக்கு சொந்தமான இன்னொரு வீட்டை சரவணனின் பெயரில் உமாபதி எழுதி வைத்தார். இருந்தும் சரவணனின் ஆசை தீரவில்லை. 

Area

மேலும் படிக்க | காதலியை பார்க்க சென்ற இளைஞர் பரிதாப சாவு..!

அக்கா மகனுக்கு கொடுத்த வீட்டையும் தன்னுடைய பெயரில் எழுதிக்கொடுக்கச் சொல்லி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒன்றல்ல இரண்டல்ல கடந்த இரண்டு வருடமாக சண்டை நீடித்து வந்தது. அதில் பல முறை தந்தை உமாபதியை சரவணன் தாக்க சென்றதாக கூறப்படுகிறது. அதற்கு சரவணனின் மனைவியான உமா மகேஷ்வரியும் உடந்தையாக இருந்தாக சொல்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து மகன் சரவணன் மீது உமாபதி போலீசில் புகாரளித்திருக்கிறார். அப்போது சரவணன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரையும் அழைத்து பேசிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இப்படியாக பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்க சமயத்தில் அந்த அதிர்ச்சி அரங்கேறியது.

Murder

மேலும் படிக்க | சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..!

டூவிலரில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த உமாபதியை சுற்றிவளைத்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமாபதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சரவணனும் தலைமறைவாக உள்ளார். சரவணனிடம் விசாரித்த பிறகே கொலைக்கான மர்மங்கள் வெளிவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்தேறிய பகீர் சம்பவத்தால் செங்கல்பட்டு மாவட்டம் அரண்டு கிடக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News