சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்... மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர் - பரபரப்பு பின்னணி

சென்னையில் காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டதால், காதலனை பெற்றோர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 12, 2024, 10:52 AM IST
  • காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை
  • விசாரணைக்கு ஆஜராகாத காதலன்
  • காரில் கடத்திய கும்பலை கைது செய்த காவல்துறை
சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்... மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர் - பரபரப்பு பின்னணி title=

விழுப்புரம் வண்டி மேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி(26). இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை ட்ராவல்ஸ் நிறுவன சூப்பர்வைசர் ஆண்ட்ரூஸ் கிறிஸ்டோபருடன், அந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழிமறித்த ஐந்து பேர் முகமது அலியை மட்டும் காரில் கடத்திச் சென்றனர். சம்பவம் தொடர்பாக கிறிஸ்டோபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் படிக்க |  இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை... 75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!

இதையடுத்து தரமணி காவல்நிலைய போலீசார் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு வாலிபர் காரில் கடத்துவது குறித்து தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் வாலிபரை கடத்திய கார் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த ஒலக்கூர் போலிசார்  காரை மடக்கி  நிறுத்தினர். பின்னர் காரில் இருந்தவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் தரமணி போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தரமணி போலீசார் இன்று அதிகாலை அங்கு சென்று அனைவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்தப்பட்ட முகமது அலியின் சித்தி மகள் சில ஆண்டுகளுக்கு முன் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கள்ளக்குறிச்சி, பாக்கம் புதூர் பகுதியைச் சேர்ந்த ரங்கீலாவும் படித்து வந்துள்ளார். அப்போது முகமது அலிக்கு ரங்கீலாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ரங்கீலாவின் பெற்றோருக்கு இருவரின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் முகமது அலிக்கும், ரங்கீலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ரங்கீலாவை விட்டு ஒதுங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ரங்கீலா கடந்த மே 13ம் தேதி பெங்களூருவில் தான் வேலை செய்த மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ரங்கீலா தற்கொலை சம்பந்தமாக விசாரிக்க போலீசார் முகமது அலியை விசாரிக்க பலமுறை அழைத்தும் அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது. பெண்ணின் உறவினர்களும் விசாரணைக்கு வர அழைத்துள்ளனர். 

ஆனால் முகமது அலி, அங்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கீலாவின் தந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், அவரது மகன் அருண் (26) மற்றும் உறவினர்கள் சங்கராபுரம் சாமுண்டி பாக்கம் புதூர் ஆறுமுகம்(33), ரவிசங்கர் (24) உட்பட 4 பேர் நேற்று அதிகாலை கொட்டிவாக்கத்திற்கு காரில் வந்து காத்திருந்தனர். அந்த சமயத்தில் சூப்பர்வைசர் உடன் டீ கடைக்கு வந்த முகமது அலியை கடத்தி சென்றது தெரியவந்தது.    இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க |  ஏடிஎம் இயந்திரத்தில் இப்படியொரு நூதன திருட்டா... 15 வயது சிறுவனின் 'பலே திட்டம்'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News