காணாமல் போன 15 வயது சிறுமி சாக்குப்பையில் சடலமாக கண்டெடுப்பு!

கோவையில் காணாமல் போன 15 வயது சிறுமி சாக்குப்பையில் சடலமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 08:32 PM IST
காணாமல் போன 15 வயது சிறுமி சாக்குப்பையில் சடலமாக கண்டெடுப்பு! title=

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முட்புதரில் சாக்கு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதை அறிந்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேதத்தை சோதனை செய்தனர். அப்போது, சடலமாக கண்டெடுக்கப்பட்டது கோவை சரவணம்பட்டி பகுதியில் காணாமல் போன 10 ஆம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.  

ALSO READ | திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!

கடந்த 11 ஆம் தேதி கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது 15 வயது மகளை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் மாணவியை கொலை செய்தது யார் ,எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் மாணவி பயன்படுத்திய நோட்டு புத்தகங்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், SFI, DYFI, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மருத்துவமனை பிரேத பரிசோதனை கட்டிடம் முன்பு திரண்டனர்.

cbe

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் தீர்வு கிட்டும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.  பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்று காத்திருக்கின்றனர்.

ALSO READ | மகளை தாயாக்கி உறவுக்கார இளைஞர் மீது பழிபோட்ட தந்தை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News