திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 07:05 PM IST
திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!  title=

திருப்பத்தூர் மாவட்டம் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜ்குமார் (26).  இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகள் ரஞ்சிதாவை  சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். (பெண் குடும்பத்தாரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இந்த நிலையில் ராஜ்குமாரின் மனைவியின் தங்கச்சியான ராணி மற்றும் (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.   எனவே இவர் 3 மாத கர்ப்பிணியாகியுள்ளார்.

ALSO READ | பிரபல நகைக்கடையில் துளையிட்டு கொள்ளை; வடநாட்டு கொள்ளையர்களின் கைவரிசையா?

இதனை அறிந்த ராணியின் தகப்பனார் கணேசன் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   இதனை விசாரித்த போலீசார் ராஜ்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

raj

அதேபோல் கௌதம் பேட்டை டி.எம்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி மகள் 16 வயது பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.  இதன் காரணமாக மனோஜ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

raj

ALSO READ | பண மோசடியில் சிக்கி சஸ்பெண்ட் ஆன வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News