கல்லூரி மாணவி படுகொலை: விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைப்பு

பொள்ளாச்சி பகுதியில் கடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி படுகொலை சம்பவத்தை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2019, 10:15 AM IST
கல்லூரி மாணவி படுகொலை: விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைப்பு title=

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமியின் மகள் பிரகதி (வயது20) கோவை தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் மாணவி காணமல் போனார். அதுக்குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று அரை நிர்வாண கோலத்தில் பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் மாணவி பிரகதி இறந்து கிடந்தார். இதுக்குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதீவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கல்லூரி மாணவி படுகொலை சம்பவத்தை விசாரிக்க ஐஜி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்க்கொள்ளப்படுகிறது.

Trending News