ராஜீவ் கொலையாளிகளின் சலுகையை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தொண்டர்கள் கைது

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி  போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 03:14 PM IST
ராஜீவ் கொலையாளிகளின் சலுகையை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தொண்டர்கள் கைது  title=

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி  போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். 

'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வரும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அவர்களை தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலையின் போது அவருடன் உயிர் நீத்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 5 கோடியும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாயும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலையும், வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில்  காங்கிரஸ் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி,  கயத்தார் முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகியோர் கழுத்தில் தூக்கு கயிறுடன் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். போராட்டத்தினை கைவிட அவர்களிடம் வலியுறுத்தினர். ஆனால் இருவரும் கேட்கவில்லை என்பதால் மேற்கு காவல் நிலைய போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

இதற்கிடையில் காந்தி மண்டபத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க தங்களிடம் முறையான ஆங்கீகாரம் பெறவில்லை என்றும், காந்தி மண்டபம் காங்கிரஸ் கட்சி சொத்து கிடையாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக வெளியேறுமாறும் கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை தலைவரும், காந்தி மண்டபத்தின் நிர்வாகியமான திருப்பதிராஜா என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் மண்டபத்தில் அனுமதி இல்லமால் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் திருப்பதிராஜா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது 

ALSO READ | தூத்துக்குடி துப்பாக்கி சூடு; எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News