கோவை: 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, 5  நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை புரியும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 14, 2023, 09:54 AM IST
  • திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி.
  • 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை.
  • திருநங்கைகளும் சாதிக்கலாம் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.
கோவை: 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை title=

கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் முயற்சியாக  5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்யும் வினோத உலக சாதனை நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருநங்கைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முயற்சி

சில வருடங்களுக்கு முன்னர் வரை, திருநங்கைகளை ஏளனமாக நடத்தி வந்த நம் ஊர், இப்போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கி வருகிறது. பாலின மாற்றம் குறித்த விழிப்புணர்வுகளும் மக்களிடையே பெருகி வருகிறது. பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் சில துறைகளில் அவர்களுக்கு ஏற்ற அங்கீகாரங்கள் கிடைக்காமலேயே உள்ளன. இதனால், அவ்வப்போது சிலர் திருநங்கைகள் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதாவதொரு முயற்சியை மேற்கொள்வர். அப்படித்தான், கோவையை சேர்ந்த ஒரு ஒப்பனைக்குழு திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் வகையில் ஒரு முயற்சியை செய்துள்ளது. 

மேலும் படிக்க | Karnataka Elections: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸிற்கு ஏறுமுகம்-தமிழக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

கோவையில் உலக சாதனை

உலக சாதனை:

திருநங்கைகளின்  வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும், மேக்கப் கலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் கோவையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக திருநங்கைகளும் சாதிக்கலாம் எனும் தலைப்பில் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜெ.எஸ்.அழகு கலை பயிற்சி நிலையத்தில் ஒப்பனை கலை சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒப்பனை கலைஞர்கள் தங்களது அழகு கலையை பயன்படுத்தி 21 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் ஐந்து நிமிடத்தில் ஒப்பனை செய்து அசத்தியுள்ளனர்.21 திருநங்கைகளை வரிசையாக அமர வைத்த சாதனை குழுவினர்,திருநங்கைகளுக்கு,கண்களை அழகு படுத்துவது,லிப்ஸ்டிக் மற்றும் முக அழகை கூட்டுவது என ஐந்து நிமிடத்தில் மணப்பெண்கள் போல முழு மேக்கப் செய்து அசத்தினர்.

குவியும் பாராட்டுகள்

ஒப்பனை கலைஞர்களின் இந்த முயற்சியினால், 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு மேக்-அப் போடப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் குழுவாக செயல்பட்டு செய்த இந்த ஒப்பனை நிகழ்ச்சி,ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஒரே நேரத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து வினோத உலக சாதனை நிகழ்ச்சியை நடத்திய குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | போலீஸ்க்கே தண்ணி காட்டிய கொலையாளிகள்.. காட்டிக் கொடுத்த டாட்டூ...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News