இன்று 5,914 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,532 ஆண்களுக்கும், 2,382 பெண்களுக்கும் அடங்குவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 08:32 PM IST
இன்று 5,914 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது title=

சென்னை: இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா (Coronavirus) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தமிழகம் கடக்கிறது. அதேநேரத்தில் இறப்பு எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,532 ஆண்களுக்கும், 2,382 பெண்களுக்கும் அடங்குவார்கள். மொத்தம் 302,815 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என தமிழக (Tamil nadu) சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை திங்களன்று 6037 ஆக இருந்தது, மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 244,675 ஆக இருந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80.8 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் 130 மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும்,  தமிழகத்தில் இதுவரை 32,92,958 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

No description available.

No description available.

Trending News