அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி பளீச்!

Edappadi Palanisamy In Tamil Nadu: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2023, 03:00 PM IST
  • கூட்டணி குறித்து நாங்கள் உறுதியாக உள்ளோம் - இபிஎஸ்
  • அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை மிக மிக சாதகமாக உள்ளது - இபிஎஸ்
  • அதிமுக சின்னம் முடக்கப்படும் என்று வருகிற தகவல் தவறானது - இபிஎஸ்
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி பளீச்!

Edappadi Palanisamy In Tamil Nadu: சேலம் மாவட்டம் எடப்பாடியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட கட்டடங்களை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

Add Zee News as a Preferred Source

தொண்டர்களின் மனது காயம்பட்டது

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிரதமர் மோடி, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகிய தேசியத் தலைவர்கள் யாரும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் பேசவில்லை. பாஜக தேசியத் தலைவர்கள் அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை கேட்டதாக பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தவறானவை. 

அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதேபோல தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்திவிட்டது. களத்தில் நின்று வெற்றிக்காக பணியாற்றப் போவது தொண்டர்கள்தான். 

வாக்குகள் சிதறாது

அவர்களால்தான் ஒரு கட்சி வெற்றி பெற முடியும். தொண்டர்களின் உணர்வை கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது.

மேலும் படிக்க | எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!

இது அதிமுகவில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுத்து முடிவின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். இதில் இடம்பெறும் கட்சிகள் குறித்து விரைவில் தெரிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாது. அதை தேர்தலுக்குப் பின்னரே உறுதியாக சொல்ல முடியும்.

100 சதவீதம் வெற்றி

கடந்த தேர்தலில் 7 நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதேபோன்று 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும், ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 100 சதவீதம் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
 
அதிமுகவுக்கு தான் வெற்றி

கடந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சி, மிக மோசமாக மக்கள் விரோதமாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். 

மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வீட்டு வரி, குடிநீர் வரி 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை மிக மிக சாதகமாக உள்ளது.

கூட்டணி இல்லை என்பது உறுதி
 
தென்னை விவசாயிகளின் கோரிக்கையை சொல்வதற்காகவே கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தனர். 6 மாதம் முன்பே இதுகுறித்து நிதி அமைச்சரை அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்து பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே கோவை வந்தபோதும் சந்தித்து பேசியுள்ளார். விவசாயிகளின் பிரதிநிதியாக, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை சொல்வதற்காகவே இந்த சந்திப்பு நடந்தது. அரசியலுக்காகவோ, கூட்டணிக்காகவோ சந்திக்கவில்லை. கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக உள்ளோம்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்

பொருந்தா கூட்டணி
 
திமுக பங்கேற்றுள்ள I.N.D.I.A கூட்டணியில் தான் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தொகுதிகளை பங்கிட விரும்பவில்லை. மத்திய பிரதேச தேர்தலுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை தனியே அறிவித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் என பொருந்தா கூட்டணியாகவே I.N.D.I.A கூட்டணி உள்ளது.

'முதல்வரை நம்பியவர்கள் இப்போது கண்ணீரில்...'
 
டெல்டா சாகுபடிக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே முதல்வர் ஸ்டாலின் அவசரமாக மேட்டூர் அணையை திறந்துவிட்டார். தற்போது மேட்டூர் அணையில் 3 நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே இருக்கிறது. முதல்வரை நம்பி 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஏற்கனவே 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்த பயிர்கள் கருகிவிட்டன. மற்ற இடங்களிலும் பயிர்கள் கருகி வருகின்றன. வேதனையில் உள்ள விவசாயிகளை முதலமைச்சர் இதுவரை நேரில் சென்று கூட பார்க்கவில்லை.

'அதிகாரத்திற்கு முக்கியத்துவம்'
 
உண்மையில் விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு வழங்க வேண்டிய நீரை கேட்டு பெற்றிருக்கலாம். இந்தியா கூட்டணிக்கு வர ஆம் ஆத்மி கெஜ்ரிவால் நிபந்தனை விதித்தது போல, காவிரி நீரை விடுவிக்க நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. 

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடமாவது முறையிட்டு இருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வரும் நிலையில் நமக்கு உரிமையான நீரை பெற்றுத் தர அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்குத்தான் அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற மட்டுமே கூட்டணி அமைத்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் முடங்குமா?
 
கிராம சபைக் கூட்டத்தில் விவசாயி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் அதிமுக சின்னம் முடக்கப்படும் என்று வருகிற தகவல் தவறானது. அப்படி ஏதும் கிடையாது. இது தேவையற்ற அரசியல் விமர்சனங்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கியுள்ளது. உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News