கஜா புயல்: ராமேஸ்வரம் செல்லும் ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே....

கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலும் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2018, 05:02 PM IST
கஜா புயல்: ராமேஸ்வரம் செல்லும் ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே....  title=

கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலும் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.....

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. நாளை (வியாழக்கிழமை) மதியம் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் எச்சரிக்கை முன்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கஜா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது திருச்சி- ராமேஸ்வரம் ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலும் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Trending News