கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!

Gossip, கிசுகிசு : ஆடியோ லீக் விவகாரத்தில் செம கடுப்பில் இருக்கும் குடில் கட்சி தலைவர் அண்மையில் பேசிய பேச்சுக்கள் அவருக்கே எதிராக மாறியுள்ளதை சைடிஷ் கணக்காக கூட உணரவில்லை என தம்பிகள் கொதிக்கிறார்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 6, 2024, 05:59 PM IST
  • ஆடியோ லீக்கில் சிக்கிய குடில் கட்சி
  • கொந்தளிப்பில் இருக்கும் இயக்குநர்
  • பெண் நிர்வாகி வெளியேற வாய்ப்பு
கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..! title=

Gossip News Tamil Latest : டீக்கடையில் கோபமாக உட்கார்ந்து இருந்த தம்பி ஒருவரிடம் டீக்கடை மாஸ்டர் நைசா பேச்சுக் கொடுத்தார். ’ஏப்பா தம்பி ரொம்ப உக்கிரமா உட்கார்ந்திருக்க, என்ன விஷயம்?" என்று கேட்க அவர் பதில் ஏதும் பேசாமல் இருந்தார். இதனை அந்தபக்கம் டேபிளில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த குசும்பன், "அண்ணே தம்பி நமக்கு தெரிஞ்சவரு தான். அவரு ஏன் கோபமா இருக்கார்னு எனக்கு தெரியும். விஷயத்தை நான் சொல்றேன் கேளுங்க" என குடில் கட்சி மேட்டரை ஆரம்பித்தான் குசும்பன். 

"அண்ணே! குடில் கட்சி கூடாராம் ஆடியோ லீக் விவகாரத்தில் கலகலத்துப்போய் உள்ளது. தலைமை பொறுப்பில் இருக்கும் முன்னாள் இயக்குநரே உட்சபட்ச டென்ஷனில் தான் இருக்கிறார். ஏனென்றால் அவரின் ஆடியோவும் லீக்காகியிருக்க இல்ல. மற்ற கட்சிக்காரர்கள் அவரின் ஆடியோவை ரெக்கார்ட் செய்து வெளியிட்டிருந்தால் கூட இது அரசியல் பழிவாங்கும் செயல் என ஒப்பேத்தியிருக்கலாம். ஆனால், உட்கட்சிகாரனே முன்னாள் இயக்குநர் பேசியதை ரெக்கார்டு செய்து லீக் செய்திருப்பதால், என்ன சொல்லி தப்பிப்பது என தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். 

மேலும் படிக்க | கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம்

அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட ’ அந்த பிசுறு ரெண்டையும் தட்டிட்டா போதும், நீங்க வேலைய பாருங்க’ என அந்த ஆடியோவில் பேசியது உண்மை தான் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் கொடுத்துவிட்டார். இதுதான் தம்பி கோபமாக இருக்க காரணம். ஆடியோவெல்லம் ஏஐ டெக்னாலஜி மூலம் தயாரிச்சி வெளியிட்டு இருக்காங்க, எங்க கட்சியை உடைக்க சதி.. அப்படினு இந்த தம்பி இணையத்தில பதிவு போட்டுக்கிட்டு இருந்தாரு. ஆனால் இயக்குநர் அண்ணன், இல்லை.. இல்லை.. நான் பேசியது தான் அந்த ஆடியோ என பொதுக்கூட்டதில சொல்லிவிட்டார். இதுக்காக தான் இவரைபோன்ற பல தம்பிகள் கோபமாக இருங்காங்க. 

ஆக்ரோஷமான அம்மன் பெயர் கொண்ட அந்த பெண்மணி பற்றி எல்லாம் இவரு இப்படி பேசியிருக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவரின் ஒப்புதல் வாக்குமூலம் ஷாக் கொடுத்துவிட்டது. இதைபோல தான் நம்மையும் எதிர்காலத்தில் பேசுவார் என நினைத்து பல முன்னணி பொறுப்பாளர்களே குடில் கட்சியில் இருந்து விலக தொடங்கிட்டாங்க. இதுக்கு மேலேயும் இயக்குநர் நம்பினால், நம்மை வைத்தே கதை வசனம் திரைக்கதை எல்லாம் தயாரித்துக் கொள்வார், நாம் ரோட்ல தான் நிற்கணும் என சொல்லிட்டு வெளியேறி இருக்காங்க. ஆடியோவில் பெயர் அடிபட்ட அந்த பெண்மணியும் இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். அவர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அந்த முடிவை எப்போது எடுக்கப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. 

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த பெண்மணி சீக்கிரம் வெளியேறட்டும் என்பதற்காகவே இயக்குநர் அப்படி பேசியிருக்கலாம் என்றும் முன்னாள் தம்பிகள் சிலர் சொல்கிறார்கள். இதுக்கு மேலேயும் அந்த ஆக்ரோஷமான அம்மன் பெயர் கொண்ட பெண்மணி அந்த குடில் கட்சியில் இருந்தால், சுயமரியாதை சுடர் என்ற பட்டத்தை தேடிக் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என கிண்டலாகவும் அந்த முன்னாள் தம்பிகள் என்னிடம் சொன்னார்கள்" என கூறிவிட்டு அடுத்த மேட்டரை கொண்டுவர கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News