தொடர் மழை! பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு லீவு!

தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2018, 09:10 AM IST
தொடர் மழை! பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு லீவு! title=

தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையின் காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Trending News