தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: IMD

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 11:23 AM IST
  • உள் மாவட்டங்களில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு.
  • எந்தெந்த மாவட்டத்தில் மழைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • டெல்டா மாவட்டங்களின் ஓரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: IMD title=

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். 

தமிழகத்தின் (Tamil Nadu) உள் மாவட்டங்களில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டத்தில் மழைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் படி, சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர்,பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களின் ஓரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் (Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: சிக்னல் பிரச்னை; சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

இது தவிர, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

சென்னையைப் (Chennai) பொறுத்தவரை, நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதமான வானிலையே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ALSO READ: ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கு: பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News