சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

Last Updated : Aug 17, 2017, 09:14 AM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை! title=

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, வில்லிவாக்கம், பெரம்பூர், புரசைவாக்கம், நந்தனம், உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால் மைலாப்பூர் சிவசாமி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரியில் உள்ள அணை மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. 

Trending News