வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழைக்கு வாய்ப்பு!

கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Last Updated : Oct 15, 2019, 10:46 AM IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழைக்கு வாய்ப்பு! title=

கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய பகுதிகளிலும் நாள் முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் மேலும் கணித்துள்ளது.

அதேப்போல் சத்தீஸ்கர், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ் வரை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலும், 26 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை ஊசலாடுவதால் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில்., வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் கடலோர தமிழகம், உள் தமிழகம் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலோர தமிழகத்தின் வளி மண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News