தவறான அறுவை சிகிச்சைக்கான இழப்பீடு வழக்கு; உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2022, 09:23 PM IST
  • நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கு.
  • தனியார் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள்.
தவறான அறுவை சிகிச்சைக்கான இழப்பீடு வழக்கு; உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு title=

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ''சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் (எ) முகமது அப்துல்லா வயிற்று வலி சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். 

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கு  வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

இதையடுத்து அவரது மனைவி சகிலால்பானு 50 லட்சம் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தை நாடவும், தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து முகமது அப்துல்லாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | ஆட்டோ மெர்சிடிஸை பின்னுக்குத் தள்ளியது: உத்தவ் தாக்கரேவை குத்திக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே

இந்நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு சகிலால்பானு வழக்கு தொடர்ந்து, அதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் சேர்த்துள்ளார். விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒரு ஆண்டு தொழில் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை நீக்கம் செய்து  உத்தரவிட வேண்டும்.'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை நீக்கி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் படிக்க | Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News