அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.  

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2024, 11:04 AM IST
  • முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை.
  • காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
  • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன? title=

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 2016 வரை தமிழகத்தின் வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஆர். வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். 2015 - 2016  காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் வைத்திலிங்கத்தின் இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!

இந்நிலையில் கடந்த 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1058% அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு மீது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றொரு வழக்கும் பதிவு செய்திருந்தனர். இதில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக சொல்லப்படுகிறது. கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், சேப்பாக்கம் மற்றும் தஞ்சை ஒரத்தநாட்டில் உள்ள அவரது இல்லம் ஆகிய இடங்களில் இப்போது தமிழகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தற்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னையில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் அவரது மகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள எம்எல்ஏ-க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சேலம் மாவட்டம் அதிமுக பிரமுகர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் வருவான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News