பிப்., 10 முதல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ADMK ஆலோசனை கூட்டம்..!

பிப்ரவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வர், துணை முதல்வர் கூட்டாக அறிக்கை!! 

Last Updated : Feb 6, 2020, 08:43 AM IST
பிப்., 10 முதல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ADMK ஆலோசனை கூட்டம்..! title=

பிப்ரவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வர், துணை முதல்வர் கூட்டாக அறிக்கை!! 

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.  

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கட்சியின் வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்கும், மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 ஆம் தேதியன்று கரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கும், 11 ஆம் தேதி திருவண்ணாமலை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12 ஆம் தேதி தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், 13 ஆம் தேதி சென்னை, நெல்லை, காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

Trending News