Karnataka Election Result: தமிழ்நாட்டிற்கு வந்த கர்நாடாக காங்கிரஸ் கட்சி தலைவர்! ஏன் தெரியுமா?

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக வெளியான வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளதாக தெரிகிறது. 224 இடங்கள் கொண்ட சட்டசபையில், 70 முதல் 75 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைக்கும்.

Written by - RK Spark | Last Updated : May 13, 2023, 02:54 PM IST
  • கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்.
  • 113 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.
  • நாளை ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.
Karnataka Election Result: தமிழ்நாட்டிற்கு வந்த கர்நாடாக காங்கிரஸ் கட்சி தலைவர்! ஏன் தெரியுமா? title=

Karnataka Election Result: கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டி.கே. சிவகுமார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் கனகபுரா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டி. கே. சிவகுமார் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் கொண்டார்.  கர்நாடக மாநிலத்தில் கடந்த புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் டி. கே. சிவகுமார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

congress

மேலும் படிக்க | மக்கள் வாக்களிக்காவிட்டால் என்ன? ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவின் மாஸ்டர் பிளான்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டம் என பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி நடத்திய நடைபயணம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பப்பு என்று ராகுல் காந்தியை விமர்சனம் செய்த பாஜகவினருக்கு, அவர் ஆப்பு வைத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து இதனை வரவேற்கும் வகையில் கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் உச்சிபிள்ளையார் கோயில் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தற்போது வரை 125 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது, இதனை கொண்டாடும் விதமாக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் .  அதன் ஒரு பகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் கலந்து கொண்டு பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று பேசினார்.

மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News