ஐகோர்ட்டின் அடுத்த அதிரடி! சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை

Last Updated : Oct 30, 2017, 01:54 PM IST
ஐகோர்ட்டின் அடுத்த அதிரடி! சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை title=

தமிழக சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் வைக்கப்பட விளம்பர பலகையால் விபத்துகள் நேர்கின்றன என கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

ஏற்கனவே உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்களோ அல்லது கட் அவுட்களோ வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் சிக்னல்களில் விளம்பர பலகையோ அல்லது பேனர்களோ வைக்க கூடாது என கூறியிருப்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

Trending News