சித்திரை திருவிழா: கோவில் வளாகத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்திற்குள்ளேயே  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள்  நடைபெறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 27, 2021, 08:30 AM IST
  • அழகர் கோவில் வளாகத்திலேயே இன்று காலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் களை கட்டும் எதிர்சேவை நிகழ்ச்சி அழகர் கோவிலில் திங்கள் கிழமை காலை மிக எளிமையாக நடைபெற்றது
சித்திரை திருவிழா: கோவில் வளாகத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் title=

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மதுரையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அழகர் கோவில் வளாகத்திலேயே இன்று காலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  நடைபெறுகிறது.

அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்திற்குள்ளேயே  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள்  நடைபெறுகின்றன.

 இந்த வைபவத்தை, மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு களிக்க, கோவில் நிர்வாகம் சார்பில் இணையதள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் களை கட்டும் எதிர்சேவை நிகழ்ச்சி அழகர் கோவிலில் திங்கள் கிழமை காலை மிக எளிமையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மக்களை சந்திக்க செல்லும் கள்ளழகரை மிகவும் கோலாகலமாக மக்கள் வரவேற்பார்கள்.  இந்தாண்டு இவை அனைத்தும் இல்லாததால், மக்கள் சோகம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றிலேயே முதல்முறையாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த மதுரை மக்கள் இந்த ஆண்டு விழாவின் போதவது, அழகரை தரிசனம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வளர்பிறை 5ம் நாளில் தொடங்கும், உலக பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 15ம் தேதி  மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ALSO READ | பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

எனினும்,  சுவாமி, அம்மன் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ALSO READ | கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News