அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி - வீட்டிற்குள் விரோதம் !

மது போதையில் உடன் பிறந்த அண்ணனை தம்பியே கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 19, 2022, 02:43 PM IST
  • அண்ணனைக் கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி
  • போதை வெறியில் அரங்கேறிய கொடூரம்
  • நீண்ட நாள் பகை கொலையில் முடிந்த சம்பவம்
அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி  - வீட்டிற்குள் விரோதம் ! title=

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பனங்காட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் குமார்(44) மற்றும் அவரது தம்பி வீராச்சாமி(41). இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எதற்கெடுத்தாலும் சண்டைகள்தான். சிறுவயது முதலே இது தொடர நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டே சென்றது. இதனால் அண்ணன் தம்பி இருவரும் எதிர்கள் போலவே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

Crime,murder,mayiladuthurai,brother,news,அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி

இந்நிலையில், வினோத் என்பவரது வீட்டில் குமார், வீராச்சாமி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது குமார் மற்றும் அவரது தம்பி வீராச்சாமி இருவருக்குமிடையே  முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் இருந்த தம்பி வீராச்சாமி தனது அண்ணன் குமாரை சென்டரிங் வேலைக்கு பயன்படுத்தும் கடப்பாறையால் தலையில் தாக்கியிருக்கிறார்.

நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர், அருகிலிருந்தவர்கள் மீட்டு குமாரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Crime,murder,mayiladuthurai,brother,news,அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி

மேலும் படிக்க | காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் - முதலிரவில் ட்விஸ்ட் வைத்த மணப்பெண் !

இறந்த குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீராசாமியை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தம்பி அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | திருமணமான 5 நாட்களில்... கறிவிருந்து வைத்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News