திரைப்பட வசனத்தைக் கூறி முன்னாள் அமைச்சரைக் கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.   

Written by - Chithira Rekha | Last Updated : May 5, 2022, 06:47 PM IST
  • சட்டசபையில் தளவாய் சுந்தரம் கேள்வி
  • வாழ்க்கை பட வசனத்தைப் பேசி பதிலளித்த துரைமுருகன்
  • சட்டசபையில் கலகலப்பு
திரைப்பட வசனத்தைக் கூறி முன்னாள் அமைச்சரைக் கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் title=

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை உணர்வு மிகவும் பிரபலமானது. சட்டசபை அல்லது கூட்டத்தில் உரையாற்றும்போதும், செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதும் நகைச்சுவை உணர்வுடன் அவர் பேசுவது அனைவரிடமும் வரவேற்பைப் பெறுவதுண்டு.

இன்றைய சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் பேசுகையில், "நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் முன்னர் கூறியது போல ஆரோக்கியபுரம் முதல் ஈரோடு வரை 2001 -ல் நான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.150 கோடிக்கு கல்கள் போடப்பட்டது. 

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் சூசகமாக கலாய்த்துக்கொண்ட துரைமுருகன் - பொன்முடி

இப்போதைய சூழல் என்னவென்றால் இதற்கான கல், மண், ரா போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரி, மணல் கிடையாது. எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்த காலத்தில் வாழ்க்கை என்று ஒரு படம். அதில் வரும் "அந்த காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது... அந்த காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது" என்ற வசனம் போல் "அந்த காலத்துல நான் மந்திரியா இருக்கும் போது.... அந்த காலத்தில் நான் மந்திரியாக இருக்கும் போது", என உறுப்பினர் கூறுகிறார்.

அங்கு இருக்க கூடிய நிலை என்னவென்று உங்களுக்கே தெரியும். கல்குவாரி வேண்டும் என்று ஒரு பிரிவும், வேண்டாம் என்று ஒரு பிரிவும் உள்ளனர். இந்த விஷயத்திற்கு சட்டமன்றம் முடிந்த பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்", என்றார். அமைச்சர் துரைமுருகனின் இந்த கலகலப்பான பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் தோற்றால் வருங்காலம் நம்மை சபிக்கும்..உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News