குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

சிறிது நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவ பெண்ணுடன் கோயிலில் சேர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2021, 09:39 PM IST
குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு! title=

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் தமிழக அரசின் சார்பில் நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னதானத்தில் சாப்பிட சென்ற என்னை முதல் பந்தியில் அமரக்கூடாது என்று சிலர் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என நரிக்குறவ பெண்ணொருவர் குற்றம் சாட்டி சமூகவலைதளங்களில் வீடியோவாக பதிவேற்றி இருந்தார்.  இந்த வீடியோ வைரல் ஆனது. 

இதனையடுத்து, மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் அமைச்சர் சேகர் பாபு கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  பின்பு சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டிய பெண்ணுடன் முதல் வரிசையில் அமர்ந்து தானும் அன்னதானத்தில் மதிய உணவை சாப்பிட்டார் சேகர்பாபு.  பின்பு நரிக்குறவ மக்கள் மற்றும் பொது மக்களுக்கு கோயில் வளாகத்தில் வேட்டி சேலைகளை வழங்கினார் அமைச்சர். 

sekarbabu

இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவ பெண் வெளியிட்ட வீடியோ அரசின் கவனத்திற்கு வந்தது. பின்பு இது முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  எனவே அந்தப் பெண்ணுடன் இன்று அமர்ந்து கோயில் வளாகத்தில் உணவு அருந்தினேன் என்று கூறினார்.

ALSO READ ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்: காவேரி மருத்துவமனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News