பசுமை வழிச் சாலை எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் போராட்டம்!

சேலம் -சென்னை இடையே பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு எதிராக மக்களைத் திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்!  

Last Updated : Jun 19, 2018, 09:34 AM IST
பசுமை வழிச் சாலை எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் போராட்டம்!  title=

தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று உறுதி தெரிவித்ததையடுத்து, சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

இந்நிலையில், விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சாலைக்காக பல கோடி மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் கூறும்போது,,!

பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் போராடும் விவசாயிகள், தாய்மார்களை எல்லாம் காவல் துறையை வைத்து கைது செய்வதும், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. எனவே, மிகவும் ஆபத்தான இந்த நிலைமையை இனியும் திமுக வேடிக்கை பார்க்காது. அனைத்து மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் திரட்டி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில், மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் கைது செய்யப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

Trending News