முதலில் விபத்து, பின் செயின் பறிப்பு: மர்ம நபர்களால் திருப்பத்தூரில் பரபரப்பு

சின்ன மூக்கனூர் சர்வீஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மொபட் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2021, 02:29 PM IST
முதலில் விபத்து, பின் செயின் பறிப்பு: மர்ம நபர்களால் திருப்பத்தூரில் பரபரப்பு title=

திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி சசிகலா. இவருக்கு வயது 42. இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே மளிகை கடை வைத்துள்ளார். 

இவர் காலையில் கடை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு அவரது மகள் மோனிகா உடன் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு கடையை மூடிக்கொண்டு பாச்சல் மேம்பாலம் வழியாக சசிகலாவை மொபட்டில் அழைத்துக்கொண்டு மோனிகா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது சின்ன மூக்கனூர் சர்வீஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரே  பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மோனிகாவின் மொபட் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதன் காரணமாக, சசிகலா, மோனிகா ஆகிய இருவரும் மொபைலில் இருந்து கீழே விழுந்ததில் சசிகலாவின் தலையில் காயம் ஏற்பட்டது. 

ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி 

இதனையடுத்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலி சரடை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகி சென்றனர். அப்போது சசிகலா மற்றும் மோனிகா ஆகிய இருவரும் கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குமுன் மர்ம நபர்கள் மாயமாகினர். 

பின்னர் சசிகலா சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் (TN Police) இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்தார். 6 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

இரவு நேரத்தில் பெண்கள் மொபட்டில் தனியாக செல்வதை நோட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி பெண்ணிடமிருந்து தாலிச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News