உடலுறவு வைத்துக் கொள்வதில் சிக்கல்? விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி!

மதுரவாயலில் திருமணமான 5 மாதத்தில் ஆண்குறியில் பிரச்சனை ஏற்பட்டதால் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 3, 2022, 04:29 PM IST
  • இதன் காரணத்தால் நாங்களே எங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  • கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமண தம்பதி தற்கொலை.
உடலுறவு வைத்துக் கொள்வதில் சிக்கல்? விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி! title=

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்(22), மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி(20) என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. 

திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர். இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை. 

கடையையும் திறக்காமல், வீட்டின் கதவையும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

மேலும் படிக்க | NBCC Recruitment 2022: நவரத்தினா நிறுவனமான என்.பி.சி.சியின் புதிய வேலைவாய்ப்புகள்

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பின்னர் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் "எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணத்தால் நாங்களே எங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என எழுதப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருவரும் மனஉளைச்சலில் இருந்தது வந்ததாகவும், தங்களுக்கு குழந்தை பிறக்காது என தன்னிச்சையாக முடிவு செய்து  தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு ரூ.5000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News