யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 2, 2022, 04:32 PM IST
  • குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்துவருகிறது
  • அமைச்சர் சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்
  • தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என அமைச்சர் விளக்கம்
 யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் விளக்கம் title=

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்,"பெண்களுக்கு பேறு காலத்திற்குப் பின் கருத்தடை வளையம் பொருத்தியத்தில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கில் சுகாதாரத் துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால், யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரிக்கும் - அண்ணாமலை உறுதி

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேர் இன்னும் போட வேண்டியது இருக்கிறது. வரும் 7ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும். இதுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவுகளை வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையால்கிறார்களா என்று ஆய்வு செய்ய முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி புரிந்தால் அது வருத்தத்திற்கு உரியது. மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் படிக்க | சேலத்தில் பெய்த கனமழை; 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News