அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில் அழுகி கிடந்த பெண் சடலம்.. நடந்தது என்ன.?

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 20, 2022, 09:01 PM IST
  • மருத்துவமனையில் அழுகிக்கிடந்த பெண் சடலம்
  • 2 நாட்களாக பிறகு தெரிய வந்த அவலம்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில் அழுகி கிடந்த பெண் சடலம்.. நடந்தது என்ன.?  title=

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமணை உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். அதே நேரம் ஏராளமான உள் நோயாளிகளும் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் ஆபரேஷன் தியேட்டர்.

இந்த ஆபரேஷன் தியேட்டரில் இருந்து திடீரென கடுமையான துறுநாற்றம் வீசியுள்ளது. இதை அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும், பணியாளர்களும் சுதாரித்துள்ளனர். தொடர்ந்து ஆபரேஷன் தியேட்டருக்குள் சுத்தம் செய்யும் நோக்கில் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்துள்ளனர். இதை பார்த்த சக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பயந்துபோகவே.., ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக ஊழியர்கள் பதட்டத்துடன் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | ரகசிய காதலியின் 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த காதலன்..!

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே சென்று பார்த்து ஊழியர்கள் சொன்னதை உறுதி செய்தனர். அது மட்டும் இன்றி அந்த பெண் உயிரிழந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உடல் அழுகிய நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சடலம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பெண்ணின் சடலம் எப்படி வந்தது. மருத்துவர்களோ அல்லது ஊழியர்களோ இதை கவனிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க |'சைக்கோ கணவனால்' கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மனைவி..!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews  ,   ட்விட்டரில்   @ZeeTamilNews   மற்றும் டெலிகிராமில்   https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

ஆண்ட்ராய்டு இணைப்பு - https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு - https://apple.co/3loQYeR

Trending News