கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர்

Gossip :  முதன்மையானவர், தன்னுடைய சொந்த டிப்பார்ட்மென்டாலேயே தொடர்ச்சியாக நெருக்கடி வருவதால் கடும் அப்செட்டில் இருக்கிறராம். அதிகாரிகளை முழுமையாக நம்பினால் இப்படி தான் ஏற்படும் என சொந்த கட்சியில் இருப்பவர்களே முனுமுனுக்க தொடங்கியிருப்பதும் அவரது காதுக்கு எட்டிவிட்டதாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2024, 03:23 PM IST
  • செம டென்ஷனில் இருக்கும் முதன்மையானவர்
  • அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளே காரணம்
  • சொந்த டிப்பார்ட்மென்ட் என்பதால் கூடுதல் கோபம்
கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர் title=

Gossip, கிசுகிசு : செய்தி கேட்டயாலே தம்பி என  கூவிக்கொண்டே வந்த சுப்பன் டீக்கடையில் வந்து உட்காருவதற்குள்ளாகவே தன்னுடைய அரசியல் அரட்டையை தொடங்க ஆரம்பித்தார். இத மொதல்ல கேளு தம்பி என லேட்டஸ்டான டாபிக் ஒன்றை அவர் பரபரப்பாக தொடங்கினார். " தம்பி.. அண்மைக்கலாமாக முதன்மையானவருக்கு சொந்தமான காவி டிப்பார்ட்மென்டில் இருந்தே அதிக பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. மற்ற துறைகளில் பிரச்சனை என்றால் இவர் தான் கூப்பிட்டு கண்டிப்பார். ஆனால், அவரது சொந்த துறையில் இருந்தே பிரச்சனை என்றால், என்ன செய்வது?. இதுவரை வந்தது எல்லாமே ஆட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக தான் இருந்திருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கதர் கட்சியின் மாவட்ட தலைவர் கொலையில் தொடங்கி அடுத்தடுத்து அரசியல் கொலைகள் வரிசையாக நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது சென்னையில் தேசிய கட்சியின் மாநில தலைவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்

இவையனைத்துக்கும் காவி துறையின் மெத்தனப்போக்கே என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை வைக்க, சொந்த கட்சி ஆதரவாளர்கள் கூட இதனை ஆமோதிக்கும் நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள். பலரும் காவி துறையின் நவடிக்கைகளில் திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். இதற்கு மிக முக்கிய காரணம் காவி துறையில் இருக்கும் சில பிளாக்ஷீப்கள் என்கிறது அரசியல் வட்டாரம். ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பல உள்ளடி வேலைகளில் அந்த துறையில் இருக்கும் சில பிளாக்ஷீப்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களாம். யாரையெல்லாம் நம்பி பொறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என முதன்மையானவர் நினைக்கிறாரோ, அவர்களாலேயே பெரிய கெட்டப்பெயர் வருவது தான் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால் செம டென்ஷனில் இருக்கும் முதன்மையானவர், என்ன செய்யலாம் என தீவிர யோசனையில் இருக்கிறாராம். 

இதனை தெரிந்து கொண்ட மூத்த தலைகளில் சில, அதிகாரிகளையே முழுமையாக நம்பினால் இப்படி தான் ஆகும், எல்லாத்துக்கும் கொஞ்சம் கடிவாளம் போட வேண்டும், நடவடிக்கை பாயும் என்ற பயமே இல்லாமல் சில கருப்பு ஆடுகள் இருக்கிறது, அதனை களையெடுக்க வேண்டும் என நாம் சொன்னால் முதன்மையானவர் எங்கே கேட்கிறார்? என தங்களுக்குள்ளாகவே முனுமுனுத்துக் கொள்கிறார்களாம். அடுத்தமுறை ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், ஒட்டுமொத்தமாக நிர்வாகத்துக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை எல்லாம் களையெடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஓரங்கட்டியாவது வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் இப்படி தான் பிரச்சனை வரும் என்றும் பேசிக் கொள்கிறார்களாம். இதுஒருபுறம் இருக்க காவித்துறைக்குள் இருக்கும் மேலிட விசுவாசிகள் எல்லாம், கச்சித்தமாக இப்போதைய சூழல் குறித்து ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். 

அப்படியே மாநிலப் பிரிவுக்கும் சில ரகசிய தகவல்கள் பரிமாறப்படுகிறதாம். இதுஎல்லாம் ரகசிய துறைக்கு தெரிந்தாலும் முதன்மையானவர் காதுகளுக்கு கொண்டு செல்வதில்லை என்ற புகாரும் இருக்கிறது. பத்து வருஷத்தில் ’காவி விசுவாசிகள்’ எல்லா துறைகளுக்குள்ளும் ஊடுருவி இருப்பதால், அவர்களை எல்லாம் களை எடுப்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்ற சூழலில் இருக்கும் முதன்மையானவர், அவர்களை வைத்தே அடுத்த இரண்டு ஆண்டுகளை நகர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். நிர்வாகத்துக்குள் இருக்கும் கருப்பு ஆடுகள் குறித்து பானை கட்சி தலைவர்  வெளிப்படையாகவே பிரச்சாரத்தில் எல்லாம் பேசியிருந்தார். இது முதன்மையானவரின் காதுகளுக்கு சென்றிருந்தால் அப்போதே காவி துறை உள்ளிட்ட துறைகளில் நடவடிக்கையை துரிதப்படுத்தியிருப்பார். அவரின் கவனத்துக்கு செல்லாததன் விளைவு தான் அடுத்தடுத்த அரசியல் கொலைகள், கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவை எல்லாம் அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

இனியாவது முதன்மையானவர் தனது சொந்த துறையால் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சாதிய வெறுப்பு பேச்சு முதல் கூலிப்படைகளை ஒடுக்குதல் வரை என சமரசமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடன்பிறப்புகளே ஆதங்கத்தோடு தெரிவிக்கிறனர். இதனையெல்லாம் முதன்மையானவர் கவனத்தில் கொள்ள முன்வருவாரா? என்பது இனி வரும் நாட்களிலேயே தெரியும்" என சுப்பன் நீட்டி முழக்க, எதிரே இருந்த தம்பி விட்டால் போதுமென விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாராம்.

மேலும் படிக்க | கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News