வாக்குச்சாவுடியில் வெப் கேமரா: ராஜேஷ் லக்கானி

Last Updated : Oct 24, 2016, 05:40 PM IST
வாக்குச்சாவுடியில் வெப் கேமரா: ராஜேஷ் லக்கானி  title=

தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் குறித்து லக்கானி தெரிவித்தாவது:-  தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு என 4 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு  மனுத்தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான  பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர் 5-ம் தேதி கடைசி நாளாகும். நவம்பர் 22-ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். 

Trending News