ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படையே பிழைதான் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிரடி

கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பதில் சொல்லியிருக்கிறது - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 20, 2022, 10:13 AM IST
  • ‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பதில்’
  • ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படையே பிழை - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
  • ‘மாநில சட்டமன்றத்தின் உரிமைகள் குறித்து நீதிமன்றம் பேசியது மிகச்சிறப்பு’
ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படையே பிழைதான் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிரடி  title=

கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில உரிமைகளின் வலிமையை உணர்த்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அமைந்துள்ளனதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி கவுன்சில் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

மதுரை மாவட்டம் சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, "ஜி.எஸ்.டி கவுன்சிலால் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை மட்டுமே அனுப்ப முடியும் ; மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற தீர்ப்பின் வழியாக உச்சநீதிமன்றம் அரசியல் சட்ட அமைப்பின் உரிமைகளைத் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்த தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுள்ளது. 

மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி

பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. இந்த நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் உணர்த்தியுள்ளன. ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு ஏற்கனவே சட்ட அமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை. அதில், கவனிக்க வேண்டியதே, மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது தான். வரலாற்றில் இல்லாத சட்டமைப்புப் பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்துள்ளோம். அதே அம்சத்தைத் தான் தீர்ப்பும் உணர்த்துகிறது. மாநில உரிமைகளைக் காக்கும் முயற்சிகளைக் கொண்டாடும் வகையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகள் அமைந்துள்ளது, ஜனநாயகத்தில் மக்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் உள்ளன. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. இதனால், ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே மொத்தத்தில் பிழையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆளுநர் தனித்து முடிவு எடுக்க அதிகாரம் இல்லை - பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News