புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னை பள்ளிகள் இயங்கும்!

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Nov 23, 2018, 09:19 AM IST
புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னை பள்ளிகள் இயங்கும்! title=

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதுவையில் பள்ளிகளுக்கு மட்டம் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாநில கல்வி இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது மழை குறைந்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம் போல் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News