ஜெ., மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்  இடைக்கால தடை விதித்துள்ளது. 

Last Updated : Apr 26, 2019, 12:44 PM IST
ஜெ., மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை title=

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்  இடைக்கால தடை விதித்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் ஆஜராக வேண்டும் என ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. 

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

Trending News