தி.மலையில் வலியால் துடித்த சிறுமி..! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 28, 2022, 01:21 PM IST
  • 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
  • பள்ளி தாளாளரின் கணவன் கைது
தி.மலையில் வலியால் துடித்த சிறுமி..! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி! title=

திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

அப்பள்ளியின் தாளாளராக உள்ள பிரபாவதியின் கணவர் காமராஜர் என்பவர் சேத்துப்பட்டு அடுத்த உலகம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் காமராஜ் அவ்வப்பொழுது தனது மனைவி பிரபாவதி நடத்தி வரும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எல்கேஜி பயிலும் நான்கரை வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, நோட்டு புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோர்களிடம் வயிறு வலிக்கிறது என்று தெரிவித்ததன் அடிப்படையில் பெற்றோர்கள் சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும் படிக்க | CBI-ல் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

அப்போது மருத்துவர்கள் யூரின் இன்ஸ்பெக்சன் இருப்பதாக கூறி மாணவிக்கு, மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் உடல்நிலை சரியாகி வழக்கம்போல் மீண்டும் பள்ளிக்குச் சென்ற சிறுமியை, தாளாளரின் கணவர் காமராஜ் மீண்டும் சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

அப்போது, சிறுமிக்கு வயிற்று வலி அதிகமாகி ரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் அழுது வயிறு வலிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதன்பின்னர், பெற்றோர்கள் சிறுமியின் உள்ளாடையில் ரத்த கரை இருப்பதைக் கண்டு உடனே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அதில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ந்து போனார்கள். உடனே இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தனர். 

பின்னர், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குரூப் போட்டோவை சிறுமியிடம் காட்டி விசாரித்ததில் பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.  

திருச்செந்தூருக்கு சென்ற காமராஜை எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து காமராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நான்கரை வயது சிறுமியை அரசு பள்ளி ஆசிரியர் சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News