புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு!

புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மே 13ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!!

Last Updated : May 10, 2019, 11:50 AM IST
புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு! title=

புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மே 13ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து ஏப்ரல் 11 ஆம் தேதி திரிபுராவில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஒரு ஓட்டுச்சாவடி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் மறுஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 10-இல் வருகிற மே 12 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க, புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் மே 13 ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என்றும் அதே நேரத்தில் திருமண விழா, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

 

Trending News