இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Apr 26, 2019, 09:33 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை title=

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் 2 பெண்கள் உட்பட 9 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே போலீசார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News